அடிப்படை வசதிகள் கேட்டு புகார் மனு

அடிப்படை வசதிகள் கேட்டு புகார் மனு
கவுன்சிலர்
திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர் புகார் மனு அளித்தனர்.

கன்னியாகுமாரி மாவட்டம் திருவட்டார் வட்டாச்சியர் ஆலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குலசேகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காங்கிரஸ் வார்டு உறுப்பினர் ரஹீலா பீவி வார்டு நம்பர் 16-ஐ புறக்கணித்து எந்த ஒரு வேலை நடைபெறவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் பலமுறை புகார் மனு கொடுத்து எந்த பலனும் இல்லை என கூறி, திருவட்டார் வட்டாச்சியர் ஆலுவலகத்தில் நடைபெற்ற ஜெமா பந்தி கூட்டத்தில் தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ரோடு வேலைகள், மின்கம்பம், லைட் மற்றும் அனைத்து வேலைகளும் செயல படுத்தி தர வேண்டும் என்று கவுன்சில் சேர்மன் ரபீக் அவர்கள் கோரிக்கை மனு வழங்கினார். மேலும் வேலை நடைபெறவில்லை என்றால் கவுன்சில் சார்பாக பேரூராட்சியை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

Tags

Next Story