வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு; 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்!!

வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு;   2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்!!

counseling

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 22 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. கலந்தாய்வு வருகிற 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது. பொது கலந்தாய்வு 29ஆம் தேதி தொடங்குகிறது. 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர். அவர்களுக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 மாணவர் கள் 200-க்கு 200 மதிப் பெண் பெற்று இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டி லும் குறைவாகும். அதேபோல 195 கட்-ஆப் மார்க்கிற்கு மேல் பெற்றவர் களின் எண்ணிக்கை 2,862 ஆகும். கடந்த ஆண்டு 2,911 பேர் அதிக மதிப்பெண் பெற்று இருந்தனர். டாப் மார்க் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாலும் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து இருப்பதாலும் டாப் கல்லூரிகளில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது. அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் கடந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. மருத்துவ கவுன்சிலிங் தேதி இதுவரையில் அறி விக்கப்படவில்லை. அதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story