கள்ளகுறிச்சி நகை திருட்டு: போலீசார் விசாரணை

கள்ளகுறிச்சி நகை திருட்டு:  போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

கள்ளகுறிச்சி நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தானைச் சேர்ந்தவர் வாசுதேவன் மகன் மணிகண்டன். இவர், கடந்த 22ம் தேதி தச்சூரில் நடந்த தனியார் பள்ளி ஆண்டு விழாவிற்காக மதியம் வீட்டை பூட்டி, சாவியை மறைவாக வைத்து சென்றுள்ளார்.

மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story