கள்ளச்சாரயம் விற்பனை; குண்டர் சட்டத்தில் கைது

கள்ளச்சாரயம் விற்பனை; குண்டர் சட்டத்தில் கைது

  கீழ்வேளூர் அருகே கள்ளச்சாரயம் விற்பனை செய்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

கீழ்வேளூர் அருகே கள்ளச்சாரயம் விற்பனை செய்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

நாகை மாவட்டத்தில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது, சிறப்புடன் செயல்பட்ட கீழ்வேளூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுகள், இனி கள்ளச்சாராயம் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பரிந்துரையின் படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கிஸ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் கள்ளச்சாரய கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட சங்கமங்கலம் குற்றம் பொருத்தானிருப்பு தனபால் மகன் குமரேசன் (29) என்ற நபரை கீழ்வேளூர் காவல் துறையினர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு சிறப்புடன் செயல்பட்ட கீழ்வேளூர் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் பாராட்டினார்கள். இதுபோன்ற கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும், இது போன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.

Tags

Next Story