வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை நாளன்று வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆட்சி ஏற்ப பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழிமுறைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story