வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு

நல்லம்பள்ளி நாட்டுக்கோழி வார சந்தையில் வரத்து குறைந்திருந்த போதும் விலை சரிவை சந்தித்தது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழிகள் வாரசந்தை நடைபெற்று வருகிறது இந்த சந்தைக்கு தர்மபுரி,தொப்பூர்,பெரியாம்பட்டி, லளிகம்,சாமிசெட்டிபட்டி,ஜருகு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற சந்தைக்கு பல்வேறு வகையான சண்டை கோழிகள் மற்றும் நாட்டுக்கோழிகள் மற்றும் வளர்ப்பு நாட்டுக் கோடுகளின் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர் இதில் கிலோ 300 ரூபாய் முதல் பெரிய அளவிலான கோழிகள் 1,000 ரூபாயில் வரையில் விற்பனையானது மேலும் கோழிகள் வரத்துக் குறைந்ததால். நாட்டுக்கோழிகள் விலை சரிந்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும் நேற்று ஒரே நாளில் 2.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story