நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது - நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் பவானி ஆற்றுப்பகுதியில் பவானிசாகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அங்கு ஒரு வாலிபர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார் இதனால் அந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர் அதில் நாட்டு துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து அவர் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் சின்னத்துரை 25 என்பது தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் இவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததும் இதற்காக நாட்டு வெடிகுண்டுகளும் வைத்திருந்ததும் தெரியவந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னத்திரையை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் எட்டு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

Tags

Next Story