வைக்கோல் போரில் நாட்டு துப்பாக்கி - போலீசார் விசாரணை

வைக்கோல் போரில் நாட்டு துப்பாக்கி - போலீசார் விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கி 

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தில் வைக்கோல் போரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி தங்கமணி அவருக்கு சொந்தமான வயல்காட்டில் மாட்டிற்கு வைக்கோல் போர் வைத்துள்ளார்.இந்த நிலையில் தங்கமணி மகன் ரத்தினகிரி என்பவர் வைக்கோல் போரில் மாட்டிற்கு தீவனம் வைப்பதற்காக வைக்கோல் கட்டை நகற்றும் போது வைக்கோல் கட்டுக்குள் நாட்டு துப்பாக்கி இருப்பதை கண்டுள்ளார். இது தொடர்பாக அவர் லாடபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளிடம் தகவல் கொடுத்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.அருகே மலைப்பகுதி இருப்பதால் எவரேனும் விலங்கு வேட்டைக்கு பயன்படுத்துவதற்காக நாட்டுதுப்பாக்கியை மறைத்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story