உறவினரை கழுத்தை அறுத்து கொன்ற தம்பதி கைது

உறவினரை கழுத்தை அறுத்து கொன்ற தம்பதி கைது

கொலை நடந்த வீடு 

திருபுவனம் அருகே மதுபோதையில் தகராறு செய்த உறவினரை கழுத்தை அறுத்து கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள வன்னிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா மகன் மலைராஜ்(58). இவருக்கு திருமணமாகி இரண்டு வாரிசுகள் உள்ளனர். இருவரது வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தார். இந்நிலையில் அவர் மது போதையில் தனது மைத்துனர்(மனைவியின் அண்ணன்) வீட்டுக்குச்சென்று மைத்துனரின் மனைவி கடம்பவனம்(67), அவரது கணவர் ராக்கப்பனையும் அரிவாளால் தாக்கியுள்ளார்.

இதில் கடம்பவனம் படுகாயமடைந்தார். இதையடுத்து ஏற்பட்ட மோதலில் மலைராஜை, கணவன், மனைவி இருவரும் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இது குறித்து மலைராஜின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புவனம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கொலை செய்தது தொடர்பாக ராக்கப்பன், கடம்பவனம் தம்பதியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story