குண்டர் சட்டத்தில் தம்பதியினர் கைது

க.பரமத்தியில் திருட்டு, கொலை வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருட்டு கொலை வழக்கில் கைதான கணவன் மனைவி இருவர் குண்டர் சட்டத்தில் கைது. கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி ரூபா என்பவரை கொலை செய்து, நகைகளை திருடிய, ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மற்றும் அவரது மனைவி நித்தியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் சம்பந்தப்பட்ட எதிரிகள் கணவன்- மனைவி இருவர் மீதும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை அளித்ததின் பேரில், மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில், இன்று டிசம்பர் 27ஆம் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கணவன்,மனைவி இருவரையும் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ,கரூர் மாவட்டத்தில் கொலை கொள்ளை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கின்ற தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story