வண்ணார்பேட்டையில் தம்பதிகள் விஷம் அருந்தி தற்கொலை

வண்ணார்பேட்டையில் தம்பதிகள் விஷம் அருந்தி தற்கொலை

தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டையில் தம்பதிகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டையை சேர்ந்த பாடகலிங்கம் மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியினருக்கு மகாராஜன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பாடகலிங்கமும் சுப்புலட்சுமி விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளியவாறு வீட்டில் கிடந்தனர். இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story