குளச்சலில் அம்மா உணவக கூரை உடைந்து விழுந்ததில் தம்பதி படுகாயம்

குளச்சலில் அம்மா உணவக கூரை உடைந்து விழுந்ததில் தம்பதி படுகாயம்
காயமடைந்தவர்கள்

குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையம் உள்ளே கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூர் பயணிகள் மற்றும் ஏழை, எளிய பொதுமக்கள் உணவருந்தி வருகின்றனர். இன்று (20-ம் தேதி) காமராஜர் சாலையை சேர்ந்த சேவியர் (57) தனதுமனைவி மல்லிகா (52)வுடன் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டி ருந்தார்.

அப்போது உணவகத்தின் மேற்கூரையின் பால் சீலிங் திடீரென உடைந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் படுகாய மடைந்தனர். உடனே அப்பகுதியினர் அவர்களை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த நகராட்சி ஆணையர் செந்தில்குமார் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டார். உடைந்து விழுந்த கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story