பைக் மீது பஸ் மோதல் தம்பதி பலி

பைக் மீது பஸ் மோதல் தம்பதி பலி

பைக் மீது பஸ் மோதல் தம்பதி பலி

ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில் பைக் மீது பஸ் மோதி விபத்து உள்ளானதில் தம்பதியர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கரும்பூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 33; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜெயலட்சுமி, 24. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கிவிட்டு, நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, மாத்துார் அருகே, தன் வாகனத்தின் வேகத்தை வெங்கடேசன் குறைத்தபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, அவர்கள் மோதியது. பேருந்து மற்றும் கன்டெய்னர் லாரிக்கு இடையே வெங்கடேசன், அவரது மனைவி சிக்கினர். உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி பலியானார். பேருந்து ஓட்டுனர் சுமன், 30, வலது கால் துண்டானது. இது குறித்து தகவலறிந்து வந்த ஒரகடம் போலீசார், பலத்த காயமடைந்த வெங்கடேசன் மற்றும் சுமனை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்."

Tags

Next Story