மின்சாரம் தாக்கி மாடு உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி மாடு  உயிரிழப்பு

பசுமாடு உயிரிழப்பு 

மின்சாரம் தாக்கி இரண்டு பசு மாடு உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 2 சினை பசுக்கள் தென்னந்தோப்பில் அறுந்து விழுந்து கிடந்த மின்சார கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு மின்சாரம் தாக்கி விவசாயியும் காயம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் இவர் சொந்தமாக இரண்டு சினை பசுக்கள் வளர்த்து வரும் நிலையில் இன்று வழக்கம்போல் ஏகாம்பரம் தனது 2 சினை பசுக்களை மேய்ச்சுலுக்காக அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.. அப்பொழுது தென்னந்தோப்பில் இருந்த மின்கம்பத்தில் தென்னை ஓலை விழுந்து மின்கம்பத்திலிருந்த மின்சார கம்பி புதரில் அறுந்து விழந்துள்ளது, இந்நிலையில் ஏகாம்பரம் எதிர்பாராவிதமாக அவ்வழியாக பசுகளை அழைத்துச்சென்ற போது அறுந்து விழுந்த மின்சார கம்பியில் சிக்கி 2 சினை பசுக்களும் பரிதாபமாக உயிரிழந்தது, உடனடியாக ஏகாம்பரம் மின்சார கம்பியில் சிக்கிய பசுக்களை மீட்க சென்ற போது அவருக்கும் மின்சார பாய்ந்ததில் ஏகாம்பரத்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது.. உடனடியாக ஏகாம்பரத்தை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து அறுந்து விழுந்த மின்சார கம்பியை சரிசெய்தனர்..

Tags

Next Story