மேட்டூரில் இரட்டை இலை சின்னத்தின் மீது மாட்டு சாணம் பூச்சு

மேட்டூரில் இரட்டை இலை சின்னத்தின் மீது மாட்டு சாணம் பூச்சு

சாணம் பூசப்பட்ட சின்னம்

மேட்டூரில் இரட்டை இலை சின்னத்தின் மீது மாட்டு சாணம் பூசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் அருகே மாதையன் குட்டையை சேர்ந்தவர் புவனேஸ்வரி (35). இவர் கொளத்தூர் அதிமுக ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக பதவி வகிக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புவனேஸ்வரி தனது வீட்டின் முன்பு உள்ள சுவற்றில்,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனுக்கு வாக்கு அளிக்குமாறு இரட்டை இலை சின்னம் வரைந்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சுவற்றில் வரையப்பட்ட இரட்டை இலை சின்னத்தின் மீது மர்ம நபர்கள் மாட்டு சாண கரைசலை பூசிச் சென்றனர்.

இன்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த புவனேஸ்வரி இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேட்டூர் காவல் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் அளித்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இரட்டை இலை சின்னத்தின் மீது சாணம் பூசி சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story