மாரண்டஅள்ளி அருகே மாடு திருடிய கும்பல் கைது

மாரண்டஅள்ளி அருகே மாடு திருடிய கும்பல் கைது

காவல் நிலையம் 

மாரண்டஅள்ளி அருகே மாடு திருடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாரண்டஅள்ளி அடுத்த பன்னிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கப்பன் விவசாயி. இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தலா 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 பசு மாடுகளை கட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது 2 மாடுகளும் காணவில்லை. இதுகுறித்து அங்கப்பன் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாடுகள் திருடியதாக மாரண்டஅள்ளி அ அடுத்த சந்திராபுரத்தை சேர்ந்த முரளிதாஸ் வெலாங்காடு,சக்திவேல் ,அஜித் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனுஷ், முருகேசன், பாலநாயக்கன அள்ளியை சேர்ந்த சேட்டு ஆகிய 6 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story