சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் தொல்லையோ தொல்லை

சாலையில் சுற்றித்திரியும்  மாடுகளால் தொல்லையோ தொல்லை

சாலையில் சுற்றி திரியும் மாடுகள் 

புதுக்கோட்டை நகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

புதுக்கோட்டை நகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் பெயரளவுக்கு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால் முழுமையாக கட்டுப்படுத்த தவறிவிட்டனர். என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புதுக்கோட்டை நகர் பகுதி மட்டுமல்ல அது சுற்றுப்புற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் இது போன்ற மாடுகள் நடுரோட்டில் படுத்துக்கொண்டும் நின்று கொண்டும், இருப்பதால் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். இப்பிரச்சனையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story