பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ஒரே நாளில் ரூ.7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை!!

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ஒரே நாளில் ரூ.7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை!!

ரூ.7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை!!

காங்கேயம் அருகே பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு காரி பசு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும். இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண் டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப் போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயி கள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இந்த காங்கேயம் இன கால்நடை விற்பனை சந்தையில் நேற்று காங்கேயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் அதிக ஆர்வத்துடன் நேரில் திரண்டு வந்து கலந்து கொண்டனர். இதனால் இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்டமொக்கம் உள்ள 38 காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 25 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடி யாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது. இதன்படி சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கயம் இன காரி பசுமாடு ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.42 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.7 லட்சத்திற்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 6 வருட காலமாகவே பழைய கோட்டை மாட்டுத்தாவணி சந்தையில் ரேக்ளா, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும் பால் உற்பத்திக்காகவும், விவசாயிகள் வளர்க்கும் ஆர்வம் காரணமாகவும் வழக்கத்தை விட பசுமாடுகள், இளங்கன்றுகள் விற்பனை விறுவிறுப் பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story