மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே குன்னலூர் ஊராட்சியில் மயான கொட்டகை கட்டவிடாமல் தடுக்கும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னலூர் ஊராட்சியில் உள்ள காந்தி அகரம் தெரு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 1000க்கும் மேற்பட்ட மக்கள் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்திய வரும் மயான கொட்டகை கடந்த கஜா புயலின் போது இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது. சுடுகாடு கட்டுவதற்கு ரூபாய் 20.57 லட்சம் வழங்கப்பட்டது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த நிதி இன்று வரை பயன்படுத்தப்பட விடாமலும் கட்டுமான பணியை தொடர்ந்து நடைபெற விடாமலும் தடுத்து நிதியை திருப்பி அனுப்பும் நோக்கில் செயல்படும் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.




Tags

Next Story