ஆவுடையார் கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆவுடையார் கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிபிஎம் கட்சி

ஆவுடையார் கோயிலில் சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கிஅருகேஆவுடையார் கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்)கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 2023 24 ஆம் ஆண்டுக்கு வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 100% இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்றும் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தில் ஒரு பகுதியான காவிரி தெற்கு வெள்ளாற்று இணைப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் , நீண்ட நாட்களாக செப்பனிடப்படால் உள்ளகுளத்துக்கு குடியிருப்பு- பெருநாவலூர் சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story