ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

நூறுநாள் வேலைத் திட்டத்தை நிறுத்திய ஒன்றிய அரசைக் கண்டித்து பூதலூரில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூறுநாள் வேலையை திடீரென நிறுத்திய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், வேலைக்கான சம்பளத்தை வழங்காமல், பல மாதங்களாக நிலுவையில் வைத்து, வறுமையில் வாடும் ஏழை மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், தேர்தல் பத்திரம் என்ற பெயரில், நிதி மோசடியில் ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகத்தைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் நான்கு ரோட்டில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், கிளைச் செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், கண்ணன், வசந்தா, கோவிந்தராஜ் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story