திண்டுக்கல்லில் சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரச்சாரம்

திண்டுக்கல்லில் சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரச்சாரம்

கூட்டத்தில் கலந்து கொண்ட சீத்தாராம் யெச்சூரி 

திண்டுக்கல் மணிக்கூண்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கூட்டணிக்கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நேற்று இரவு கூட்டணிக்கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: தமிழக மக்களைத் தான் மற்ற மாநில மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பா.ஜ.க, தோற்கடிக்கப் பட்டதுபோல் இந்த முறையும் மீண்டும் முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

சுதந்திர இந்தியாவில் இதுவரை பார்க்காத கொடூரமாக 150 எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story