மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க இயக்கம் நடத்த சிபிஎம் முடிவு

மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க இயக்கம் நடத்த சிபிஎம் முடிவு

பேராவூரணியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க இயக்கம் நடத்த சிபிஎம் முடிவு செய்துள்ளது.


பேராவூரணியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க இயக்கம் நடத்த சிபிஎம் முடிவு செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிளைச் செயலாளர்கள் கூட்டம், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தராஜ் தலைமையில், கணபதி நகர் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.பன்னீர்செல்வம், சி.சரிதா மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தங்களுடைய கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்காலத்தில் தங்கள் கிராமத்தில் வெகுஜன அமைப்புகளை உருவாக்குவது குறித்தும், மக்கள் ஜீவாதாரப் பிரச்சினையாக இருக்கக் கூடிய விபரங்கள் குறித்தும் பேசப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து கிளைகளிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Tags

Next Story