பூதலூர் அருகே சிபிஎம் பொதுக்கூட்டம் 

பூதலூர் அருகே சிபிஎம் பொதுக்கூட்டம் 

பூதலூர் அருகே சி பி எம் பொதுக்கூட்டம் நடைபெற்றது


பூதலூர் அருகே சி பி எம் பொதுக்கூட்டம் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம், வெண்டையம்பட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளின் சார்பில், அமரர் கே.ரெத்தினம் 47 ஆவது ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம், செவ்வாய்க்கிழமை மாலை கிளைச்செயலாளர்கள் எம்.பேல்ஸ்ராஜ், எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர்கள் சி.பாஸ்கர் (பூதலூர் தெற்கு), எம்.ரமேஷ் (பூதலூர் வடக்கு), கே.அபிமன்னன் (தஞ்சாவூர்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்தல் நிதி வழங்கப்பட்டது. கட்சியில்,சிலர் புதிதாக தங்களை இணைத்துக் கொண்டனர். முன்னதாக தியாகி என்.வி.கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story