சிபிஎம் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா 

செங்கிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம், செங்கிப்பட்டியில் ஓவியா திருமண மஹாலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலவரம், எதிர்கால திட்டங்கள், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசினர். தொடர்ந்து, கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கப்பட்டது. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story