நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎம்  ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டம் 

கோவை சிவானந்தா காலனியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை சிவானந்தா காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏழைகளையும் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வை நடைமுறைப்படுத்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,கோச்சிங் மையங்களை தடை செய்து நீட் தேர்வை ரத்து செய்திடவும்,நீட் தேர்வின் பெயரால் நடந்த மோசடிகளுக்கு நியாயம் வழங்கிடவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ் கனகராஜ் தலைமை வகித்தார்.இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுதா, மருத்துவர் நேரு பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் நன்றி உரை நிகழ்த்தினார்.

Tags

Next Story