ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

செய்யாறில் மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மின்வாரிய அலுவலகம் எதிரில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மின்வாரிய அலுவலகம் எதிரில் மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழுஉறுப்பினர் செல்வன், வி.ச.மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாமோதரன்,வரதன் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மின்வாரிய அலுவலகங்கள் முன்பு தமிழகம் முழுவதும் பெருந்திரள் மனு கொடுக்கும் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story