விருதுநகர் நகராட்சியை கண்டித்து சிபிஎம் வைத்துள்ள சுவரொட்டி வைரல்

விருதுநகர்  நகராட்சியை கண்டித்து சிபிஎம் வைத்துள்ள சுவரொட்டி வைரல்

சிபிஎம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்

விருதுநகரில் பாதாள சாக்கடை தொட்டிகளை திறந்து வைத்திருக்கும் நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் நாள் ஒன்றுக்கு சுமார் லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்வது வழக்கம் இந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தக்கூடிய பகுதிகள் உள்ளனர் நிலையில்,

இந்த சாலையை நாளொன்றுக்கு ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இந்தப் பகுதியாகச் செல்லும் இரண்டு பாதாள சாக்கடை தொட்டிகளை நகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக திறந்து வைத்துள்ளது இதனை சரி செய்ய பல முயற்சிகள் செய்தும் எதுவும் பயனளிக்காத நிலையில் பாதாள சாக்கடை தொட்டிகளை திறந்து வைத்து,

ஓஸ் மூலம் அந்த கழிவுநீர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு அதை சுற்றி பாதுகாப்பிற்காக பேரிங் காடுகள் வைக்கப்பட்டுள்ளனர் இது விபத்திற்கு வழிவகை செய்யும் என்பதால் இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தை தூண்டாத என நகராட்சியை சுவரொட்டி வைக்கப்பட்டுள்ளது அதில் இரண்டு மாத காலமாக ராமமூர்த்தி சாலையில் பாதாள சாக்கடை தொட்டிகளை திறந்து வைத்திருக்கும்,

மர்மமென்ன உயிர்பலிகள் ஏற்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை எனில் போராட்டத்தை தூண்டாத என நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சுவரொட்டி வைக்கப்பட்டுள்ளது

Tags

Next Story