சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஊட்டியில் காத்திருப்பு போராட்டம்!

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஊட்டியில் காத்திருப்பு போராட்டம்!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஊட்டியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஊட்டியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த இயக்கத்தினர் இன்று தமிழகம் முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி நீலகிரி மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.பி.எஸ்., இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜக்குபாய் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு வாக்குகளையும் வாங்கிவிட்டு இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க., அரசு மௌனம் காப்பதும், ஏதேதோ காரணம் கூறுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்," என்றனர்.

Tags

Next Story