பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரணம்

பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரணம்
விபத்து நடந்த பட்டாசு ஆலை
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 24 ஆம் தேதி எதிர்பாராத விதமாக நடந்த வெடி வெடி விபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அருணாச்சலபுரம் கிராமத்தைச் சார்ந்த அஜித்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர செய்தி கேட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வேதனை அடைந்ததாகவும் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பம் மற்றும் அவருடைய உறவினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story