பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண தொகை

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் அறிவித்த நிவாரண தொகையை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி கிராமத்தில் இன்று காலை பட்டாசு ஆலை வெடிபுபத்து ஏற்பட்டது இந்த வெடிவிபத்தில் மாரிச்சாமி (40) செல்வகுமார் (35) மோகன்(30) ராஜ்குமார் (45) ஆகிய பட்டாசு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை வழங்குமாறு உத்திரவிட்டார். இதை அடுத்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திடம் 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

Tags

Next Story