நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு - 50 பேர் மீது வழக்கு

நேர கட்டுப்பாட்டை  மீறி பட்டாசு - 50 பேர் மீது வழக்கு

50 பேர் மீது வழக்கு 

தமிழகத்தில் தீபாவளி பணிகை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் சுற்று சூழலை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் 7 மணிவரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என நேர கட்டுப்பாட்டை தமிழக அரசு உத்தரவாக பிறப்பித்திருந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினரோடு புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய இரு காவல் உட்கோட்டங்களில் விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story