செவிலிமேடு பாலச்சாலையில் விரிசல்: சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

செவிலிமேடு பாலச்சாலையில் விரிசல்: சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
விரிசல் அடைந்துள்ள சாலை
செவிலிமேடு பாலாற்று பாலத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து, வெம்பாக்கம், பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் டூ - வீலர், கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செவிலிமேடு - பாலாற்று பாலம் வழியாக சென்று வருகின்றன. வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த மேம்பாலத்தின் மீது போடப்பட்டுள்ள சாலையின் இணைப்பு பகுதியில்,சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், செவிலிமேடு பாலாற்று பாலத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story