மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் மேளா: ரூ.93 லட்சம் கடனுதவி

மத்திய கூட்டுறவு வங்கியில்  கடன் மேளா: ரூ.93 லட்சம் கடனுதவி

கடன் மேளா

சாத்தான்குளம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளாவையொட்டி ரூ.93 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாத்தான்குளம் கிளை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடன் மேளா மற்றும் நிரந்தர வைப்பு நிதி சேமிப்பு முகாம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் விஜயன் தலைமை வகித்தார். உதவி பொது மேலாளர் பழனியாண்டி, நிர்வாகப் பிரிவு மேலாளர் ஜோசப் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் கிளை மேலாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். இதில் சமுதாய வள பயிற்றுநர் டெய்சி, ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகன், பெமினா ஆகியோர் பேசினர். இதில் 8 மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் ,விதவை, மாற்றுத் திறனாளி,சிறு வணிகர்களுக்கு ரூ93 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.

ரூ.7 லட்சம் வைப்பு த்தொகை பெறப்பட்டது. இதில் திமுக நகர செயலர் மகா.இளங்கோ, சாத்தான்குளம் வட்டார மகளிர் சுய உதவி குழு பொறுப்பாளர், ஜோன்குமாரி, சாத்தான்குளம் பேரூராட்சி சுய உதவிக் குழு பயிற்றுனர் டெய்சிராணி, தலைமையக பணியாளர் காளிமுத்து, வங்கி பணியாளர்கள் முருகன், கிருஷ்ணகுமார், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வங்கி கிளை காசாளர் மீனாட்சி நாதன் நன்றி கூறினார்.

Tags

Next Story