திருவாரூர் அருகே கடன் மேளா: அமைச்சர் பங்கேற்பு

திருவாரூர் அருகே  கடன் மேளா: அமைச்சர் பங்கேற்பு

கடன் மேளா


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மக்கள் மன்ற வட்ட அரங்கில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கூட்டுறவு துறையின் சார்பில் கடன் மேளா நிகழ்ச்சி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 1418 பயனாளிகளுக்கு ரூபாய் 1537. 73 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்வி ராஜா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் ஒன்றிய குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் சித்ரா ,பெரியசாமி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story