கிரிக்கெட் போட்டி: கரும்பனூர் அணிக்கு முதல் பரிசு

கிரிக்கெட் போட்டி: கரும்பனூர் அணிக்கு முதல் பரிசு
ஆலங்குளம் அருகே கிரிக்கெட் போட்டி: கரும்பனூர் அணிக்கு முதல் பரிசு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கரும்பனூர் அணிக்கு முதல் பரிசு பெற்றது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகில் உள்ள சென்னல்தாபுதுக்குளத்தில் இளம்புயல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டியில் கரும்பனூர் அணி முதல் பரிசும், சென்னல்தாபுதுக்குளம் இளம்புயல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 2வது பரிசும், கோலி கிரிக்கெட் கிளப் அணி 3வது பரிசும், 4 வது பரிசு கே. பி. ஆர். பிரதர்ஸ் அணியும், 5வது பரிசு திப்பணம்பட்டி வி. கே. எஸ். நண்பர்கள் அணி, கோல்டன் 30 பிளஸ் அணி, ஏ. சி. சி. பி அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சென்னல்தா புதுக்குளம் இளம்புயல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.

Tags

Next Story