தேனிமலையில் கிரிக்கெட் போட்டி

தேனிமலையில் கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டி 

புதுக்கோட்டை மாவட்டம், தேனிமலையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏராளமான அணிகள் பங்கேற்கின்றன.

பொன்னமராவதி அருகே தேனிமலை எஸ்எஸ்ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் பள்ளி மாணவர் களுக்கு இடையேயான கோடைக்கால கிரிக்கெட் போட்டி கல்வி நிறுவன மைதானத்தில் நடந்தது. இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண் டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த 45 பள்ளி அணிகள் பங்கேற்றன.

முதலிடத்தை புத்தாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், இரண்டாமிடத்தை பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், மூன்றாமிடத்தை சிங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும்பெற்றன.

வெற்றிப்பெற்ற அணிகளுக்கு எஸ்எஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சுப்புராஜ், துணைத்தலைவர் சுந்தர்ராஜ், முதல்வர்கள் பூபாண்டி, மணி கண்டன், பொன்னுச்சாமி, நாட்டாமை ராஜேந்திரன், கண்டெடுத்தான்பட்டி ஊர்த்தலைவர் சுப்பையா ஆகியோர் பரிசு வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற் கல்வி ஆசிரியர் முத்துராமன் மற்றும் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் செய்திருந்தனர். எஸ்எஸ்ஆர் கல்வி நிறுவன இயக்குநர் திவ்யா நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story