பாவூா்சத்திரத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

பாவூா்சத்திரத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பாவூா்சத்திரத்தில் பிலீவ் கிரிக்கெட் கிளப் சாா்பில் 14 வயதுக்குள்பட்டோருக்கான இப்போட்டி நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு கோப்பை பரிசுகளையும் நடுவா் சிறந்த வீரா்களுக்கு பரிசுகளையும் வழங்கினாா். கீழப்பாவூா் மேற்கு ஓன்றியச் செயலா் க. சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் செல்வன், கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கிரிக்கெட் கிளப் அமைப்பாளா் அருண், வழக்குரைஞா் ஹரி ஆகியோா் செய்திருந்தனா்.

Tags

Next Story