கெங்கவல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிறைவு

கெங்கவல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிறைவு
போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு 
கெங்கவல்லியில் ஒரு வாரமாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லியில் கிரிக்கெட் போர்டு சார்பில் கடந்த ஒரு வாரமாக கெங்கவல்லி ஆணையாம்பட்டியில் போட்டி நடைபெற்றது.

இதில், கெங்கவல்லி, சோமம்பட்டி, தம்மம்பட்டி, தெடாவூர், வீரகனூர், ஆத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இப்போட்டி புத்தாண்டு அன்று நிறைவு பெற்றது. இதில் முதலிடத்தை ஆணையாம்பட்டி அணியும், 2-ஆம் இடத்தை கெங்கவல்லி அணியும், மூன்றாவது இடத்தை சோமம்பட்டி அணியும், நான்காம் இடத்தை கெங்கவல்லி ஏசிசி அணியும் பெற்றன.

இதற்கான ரொக்கப்பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்றது.ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார் வெங்கட், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரொக்கப் பரிசுகளை நன்கொடையாளர்கள் சார்பாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் தங்கப் பாண்டியன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தங்கவேல், பேரூராட்சிமன்றத் துணைத்தலைவர் மருதாம்பாள் நாகராஜ் ஆகியோர் வழங்கினர்.

Tags

Next Story