கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா 

இதய நோயிலிருந்து இளைஞா்களை பாதுகாப்பதை வலியுறுத்தி தொழிற்சாலைகளுக்கு இடையேயான பிரசாந்த்-ரைசா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா டிஜெஎஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் வளாக உற்பத்தியாளா் சங்கம், சிப்காட் ரோட்டரி சங்கம், சோழவரம் முதல் ஸ்ரீ சிட்டி மனிதவள மன்றம், அலமேலு புற்றுநோய் விழிப்புணா்வு அறக்கட்டளை, சென்னை பிரசாந்த் மருத்துவமனை இணைந்து நடத்திய இப்போட்டியில் 36 நிறுவனங்கள் பங்கேற்றன.

நிகழ்வில் பிரசாந்த் மருத்துவமனை நிா்வாக இயக்குனா் டாக்டா் பிரசாந்த் கிருஷ்ணா, தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் பாஸ்கரன், கும்மிடிப்பூண்டி தொழில் நகர ரோட்டரி சங்க தலைவா் கே.ராஜகோபாலன், எஸ் டூ எஸ் மன்றத்தின் தலைவா் ஜெ.ராஜரத்தினம், எஸ் டூ எஸ் மன்ற நிறுவனத் தலைவா் பி.ரவிக்குமாா், சிப்காட் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ஜி.எம்.கிருஷ்ணமூா்த்தி, எஸ் டூ எஸ் மன்ற பொருளாளா் கே.வெங்கடேஷ் குமாா், டி.ஜெ.எஸ் கல்விக் குழும இயக்குனா் டி.ஜெ.தமிழரசன் முன்னிலை வகித்தனா்.

இதில் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ஜேசுபாபு ஹனிமன் வாழ்த்துரை வழங்கினாா்.

Tags

Next Story