கல்குவாரியில் தவறி விழுந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை
![கல்குவாரியில் தவறி விழுந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை கல்குவாரியில் தவறி விழுந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை](https://king24x7.com/h-upload/2024/06/07/540485-image3a1000942334.webp)
கொற்றிகோடு அருகே கல்குவாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸ் விசாரணை நடக்கிறது.
அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்.கல் உடைக்கும் தொழிலாளி. இவர் கொற்றிக்கோடு பகுதியில் உள்ள சுல்குவாரியில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மதியம் பாறைகளுக்கு மேல் ஏறி நின்று கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஜஸ்டினை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் குவாரியில் வெடி விபத்து நடந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் பரவியது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் குவாரி முன் குவிந்தனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொற்றிக்கோடு போலீசார் விசாரணை நடத்தியதில் ஜஸ்டின் தவறி விழுந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் சிலரை குவாரிக்கு அழைத்து சென்று விபத்து நடந்த பகுதியை பார்வையிட அனுமதித்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.