கன்னியாகுமரி கோவிலில் அலைமோதிய அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

கன்னியாகுமரி கோவிலில் அலைமோதிய அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.
வரிசையில் நின்ற பக்தர்கள்
கன்னியாகுமரி கோவிலில் அலைமோதிய அய்யப்ப பக்தர்கள் கூட்டம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்தனர். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Tags

Next Story