பழநி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பழநி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

விடுமுறை மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழநி முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

விடுமுறை மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழநி முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடான பழனிக்கு தமிழக மட்டுமின்றி வெளிமாநில வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்று வருவதால் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

இன்று விடுமுறை தினம் மற்றும் வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால் பழனியில் கூட்டம் அலைமோதியது.‌ அடிவாரம் பகுதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் விசேஷங்கள் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story