திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம்

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் பயணிகள்  கூட்டம்
பயணிகள் கூட்டம் 
பொங்கல் விடுமுறை முடிந்ததையடுத்து சென்னை, கோவை, திருப்பூர், வேலூர் மாவட்டங்களுக்கு செல்ல பயணிகள் குவிந்ததால் பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகளவில் இருந்தது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த திங்கள்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நிகழாண்டில் பல பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விடுமுறை 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அளிக்கப்பட்டது. சென்னை, கோவை, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.தொடர்ந்து விடுமுறை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று மாலையில் அவரவர் வசிக்கும் பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லத் தொடங்கினர். இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது.

Tags

Next Story