சந்தையில் காய்கறிகளை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

சந்தையில் காய்கறிகளை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

காய்கறி வாங்க குவிந்த மக்கள் 

தூத்துக்குடி காய்கறி சந்தையில் காய்கறிகளை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம், மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலையில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள்
தூத்துக்குடியில் கடந்த 17,18 ஆம் தேதி பெய்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் சூழ்ந்தது. குறிப்பாக தூத்துக்குடி வி எம் எஸ் நகர் குறிஞ்சி நகர் முத்தம்மாள் காலனி ரஹ்மத் நகர் ஸ்டேட் பேங்க் காலனி முருகேசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் நான்காவது நாளாகவும் இன்னும் வடியாமல் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி பிரதான சாலையான வ உ சி சாலை தூத்துக்குடி திருநெல்வேலி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிந்ததால் சீரான போக்குவரத்து துவங்கி உள்ளது. மேலும் காய்கறி மார்க்கெட் தண்ணீர் இன்னும் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் சாலை ஓரமாக கடைகளை அமைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர் மேலும் வெள்ள பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியமான காய்கறிகள் வாங்க குவிந்து உள்ளனர்.

Tags

Next Story