வண்டலூர் உயிரியல் பூங்காவில் அலைமோதும் மக்கள் கூட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அலைமோதும் மக்கள் கூட்டம்

விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோடை விடுமுறையை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்காவில் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும் 12,000த்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். கோடை விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வண்டலுார் பூங்காவுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றும் கூட்டம் அலைமோதியது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மேலும் அதிகளவில் பார்வையாளர்கள் வருவர் என கருதி, அதற்கான ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Tags

Next Story