வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த பொதுமக்கள்

விடுமுறையை முன்னிட்டு மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் ஏரியில் உள்ள மரங்களில் கூடு கட்டி உள்ளது. விடுமுறை நாள் என்பதால் அதிகமான பார்வையாளர்கள் குடும்பத்துடன் செல்பி எடுத்து பறவையைக் கண்டு மகிழ்ந்தனர்.

Tags

Next Story