கடலூர்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 32,972 மாணவர்கள்

கடலூர்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 32,972 மாணவர்கள்

 பொதுத்தேர்வு 

கடலூர் மாவட்டத்தில் இன்று துவங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 152 தேர்வு மையங்களில் 32,972 மாணவர்கள் எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கி அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கடலூா் மாவட்டத்தில் உள்ள 438 பள்ளிகளில் படிக்கும் 17,194 மாணவா்கள், 15,778 மாணவிகள் என மொத்தம் 32,972 போ் தோ்வு எழுத உள்ளனா். இதற்காக மொத்தம் 152 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லாமல் 7 தோ்வு மையங்களில் 1,957 தனித் தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா்.

Tags

Next Story