கடலூர் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

கடலூர்  : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
கடலூரில் கடலுக்கு செல்ல தடை
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளது
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் கடலூா் மாவட்டத்தை சாா்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது. மீனவா்கள் தங்களது மீன்பிடி படகுகள், வலைகள், என்ஜின் ஆகியவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story