அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒருவர் பலி

இறந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

போலீசார் விசாரணையில், ஒடிசா மாநிலம் நாவான்பூர் பாசு முதளி மகன் தம்மு முதளி என்பது தெரிந்தது. ஒடிசாவில் இருந்து மதுரை நோக்கி ரயிலில் சென்ற தம்மு முதளி விருத்தாசலத்தில் வழித் தவறி இறங்கியதும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது தெரிய வந்தது.

மேலும், மதுரை திருமங்கலம் ரயில் நிலையத்தில் பணிபுரிய நண்பர்களுடன் வந்தபோது, விபத்தில் சிக்கி இறந்ததும் தெரிந்தது. இது குறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story